your attention please....



குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள்
மிகை நாடி மிகக் கொளல்.”

********************************************************

THIS bilingual BLOG

IS INTENDED TO CREATE A BETTER AWARENESS OF HEALTH ISSUES AMONG PUBLIC
.

****************************************************
nothing in this blog will ever ever substitute a sincere consultation and a meaningful advice of a doctor.

********************************************************
மருந்து தருவது மருத்துவன் கடமை. ஆரோக்கியம் பெறுவது ஆண்டவன் அருள்.



Thursday, January 8, 2009

காது அடைத்திருக்கிறது.

காது அடைத்திருக்கிறது. அதில் மெழுகு அதிகம் இருக்கிறது. அதை ச்சுத்தம் செய்யுங்கள் என்று எனது வழக்கமான மருத்துவர் கூறிய அறிவுரையைத் தொடர்ந்து ஒரு காது, மூக்கு, தொண்டை நிபுணர் (அவர் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் கூட) நேற்று முன் தினம் சென்றேன்.

அது ஒரு பெரிய மருத்துவகம். கிட்டத்தட்ட ஒரு மூன்று நட்சத்திர ஹோட்டல் வசதிகள் கூடியதாக இருந்தது. அதில் எல்லாவகையான பரிசோதனைகளும் நடத்தப்படுகின்றன. 24 மணி நேர எமர்ஜென்சி மருத்துவகம் என்று பலகை அறிவிக்கிறது.

உள்ளே சென்று என் பெயரைப் பதிவு செய்துகொண்டேன். எனது முறை வந்தது. மருத்துவர் அறைக்குச் சென்றேன்.
என்ன தொல்லை எனச் சொன்னவுடன் என் காதைப் பார்த்தார். ஆமாம். சுத்தப்படுத்த வேண்டும். இருப்பினும் உங்கள் மூக்கிலும் பிரச்னை இருக்கிறது என்றார். அதற்கு ஒரு எக்ஸ் ரே எடுத்துக் கொண்டு வாருங்கள் என்றார். அங்கேயே எக்ஸ் ரே பிடிக்கவும் அவரது மருத்துவ ஆலோசனைக் கட்டணத்தையும் செலுத்திவிட்டு, எக்ஸ் ரேக்காக காத்திருந்தேன். எக்ஸ் ரே பி என். எஸ் என்று சொன்னார்கள். குப்புறப்படுக்க வைத்து விட்டு, தலைக்கு மேல் கருவியை வைத்துவிட்டு எடுத்தார்கள்.

ஒரு அரை மணி நேரம் கழித்து எக்ஸ் ரே படத்தை கொடுத்தார்கள். அதை எடுத்துக் கொண்டு போய் திரும்பவும் அந்த நிபுணரிடம் காண்பித்தேன். அவர் அதைப் பார்த்துவிட்டு ஒரு ஸ்கான் எடுத்துக் கொண்டு வாருங்கள். இன்றோ அல்லது நாளையோ வாருங்கள். உங்களுக்கு மூக்கில் இருபக்கங்களிலும் அடைப்பு (ப்ளாக்) இருக்கிறது. அதற்கு சர்ஜரி தேவையா இல்லையா என்று அதைப் பார்த்தபின் சொல்கிறேன் என்றார்.

என்ன இது ! எனக்கு இந்த சளி தொந்தரவை த்தவிர்த்து அதுவும் இந்த குளிர் காலத்தில் இருப்பது தான். வேறு எதுவும் இந்த 66 வயதில் வரவில்லையே ! எதற்கு ஸ்கான் ? என்ன வியாதியாக இருக்கும் ? ஆபரேஷன் என்று சொல்கிறாரே ! அது இந்த வயதில் முடியுமா ? இதை ச் செய்து தான் ஆக வேண்டுமா ?

ஸ்கானுக்கு எத்தனை செலவாகும் எனக் கேட்டேன். 2500 ரூபாய் என்றார்கள்.

அதற்கு இந்த சளியை அவ்வப்போது சிந்தி எறிவதற்கு டிஷ்யூ பேப்பர் ஒரு 1000000 வாங்கிவிடலாமே என நினைத்தேன்.

எதற்கும் எனது வழக்கமான ஆலோசனை மருத்துவரைச் சந்தித்து அவரது அறிவுரைதனை ப் பெறலாம் என்று சென்றேன்.

அவரிடம் அந்த எக்ஸ் ரே யைக் காண்பித்தேன்.

சளி பிடித்திருக்கிறது. அவ்வளவு தான். என்றார். ஸ்கான் என்று இழுத்தேன். சிரித்தார்.
சிரிக்கிறார்.

மருத்துவத் தொழிலில் transparency என்பது விட்டுப்போய் பலகாலம் ஆயிற்று .

சளி பிடித்திருக்கிறது. அதோடு கூட எனக்கு சனியும் பிடித்திருக்கிறது என்று நினைத்து க்கொண்டு வீடு திரும்பினேன்.

சனி ஆயுஷ்காரகன். இப்போது கோசரத்தில் சனி சிம்மத்திலும் ராகு மகரத்திலும் இருக்கிறார்கள். ஒன்றுக்கொன்று
ஆறுக்கு எட்டு. ( ஷஷ்டாஷ்டகம் ) அதனால்தான் இப்படி படுத்துகிறதோ என்று நினைத்துக் கொண்டு திரும்பினேன்.

வலை அன்பர் திரு சுப்பையா அவர்களிடம் கேட்கவேண்டும்.

Wednesday, December 24, 2008

ஒரு மாத்திரையா அல்லது ஒரு கூடை மாத்திரையா ?

combo of medications


ஒரு மாத்திரையா அல்லது ஒரு கூடை மாத்திரையா ?

சென்ற மாதம் நானும் என் மனைவியும் ஆள்வார்பேட்டையில் உள்ள ஒரு மருத்துவகத்தில் சேரவேண்டிய‌
நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. ஏதோ ஃப்ளூ போல துவங்கியது சில நாட்களில் என்னவென்றே புரியாத நிலையில் உடல் வலி, இருமல், வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகளில்
கொண்டுபோய் விட, மருத்துவர் எங்களை உள் நோயாளிகளாக அமர்த்தி பல்வேறு பரிசோதனைகள் செய்து, பிறகு
ஏகப்பட்ட ஆன்டி பயாடிக், ஊசி மூலமாகவும் வாய் வழியாகவும் சாப்பிட்டு, ஏதோ சரியான மாதிரி இருந்தபோது, இனி
போதும், நீங்கள் போகலாம் என்று ஆஸ்பத்திரியிலிருந்து விடுதலை பெற்றோம்.

ஒரு நாளைக்கு என்று பார்த்தால் வயதான என்னைப் போன்ற பலர், ஒரு கிட்டத்தட்ட 5 முதல் 10 மாத்திரைகள்
இரு வேளை அல்லது மூன்று வேளைகள் சாப்பிடுகிறார்கள். ருமாடிஸம் ( ரொமான்டிஸம் அல்ல ) , டயாபிடிஸ்
ரத்தக் கொதிப்பு அல்லது அழுத்தம் போன்ற பல்வேறு உபாதைகள் தனியாகவோ அல்லது சேர்ந்தோ 50 வயது
கடந்தவர்களில் சுமார் 40 முதல் 60 விழுக்காடு மக்களுக்கு இருப்பதால், இவர்கள் சாப்பிடும் மாத்திரைகள் ஏற்படுத்தும்
பின் விளைவுகள் மட்டுமல்ல, ஒன்றோடு ஒன்று ஒவ்வாத நிலையில் ஏற்படுத்தும் பக்க விளைவுகளும் அதிகம்.
இதற்காக இவர்கள் மருத்துவர்கள் ஆலோசனையில்லாமல் தாமாகவே மருந்தகத்தில் வாங்கி சாப்பிடும் மாத்திரைகளும்
சேரும்.

நான் மருத்துவகத்தில் இருந்தபோது ஒரு முதியவரும் இருந்தார். வெகு நகைச்சுவை உணர்வோடு எல்லோரிடமும்
பேசிக்கொண்டிருந்தார். இரண்டாம் உலகப் போர் நடந்தபோது கால் நடையாகவே இந்தியாவுக்கு வந்தாராம்.
கிட்டத்தட்ட உலகத்தில் எல்லா நாடுகளுக்கும் சென்றிருக்கிறார். இப்போது வயது 89 தான் ஆகிறது என்றார்.
அவர் வயதிற்கு அவர் நடப்பதும், சாப்பிடுவதும், பேசுவதையும் பார்த்தால் ஆரோக்கியமானவராகவே தோன்றியது.
என்ன பிரச்னை இவருக்கு என்று கேட்டேன். ஒன்றுமில்லை என்றார். ஒன்றுமில்லையா அப்படி என்றால் ஏன்
இங்கு வந்தீர்கள் என்று கேட்டேன். தூக்கம் வரவில்லை, நான் ஏதாவது பேசிக்கொண்டே இருக்கிறேன், என்
பையனுக்கு (அவனுக்கு வயது 65 ) தொந்தரவாக இருக்கும் போல் இருக்கிறது. அதனால், என்னை இங்கே
அட்மிட் செய்து, தூங்கப்பண்ணச்சொல்லி இருக்கிறார் , என்றார்.

இரவு 8 மணி இருக்கும். நர்ஸ் அவரிடம், தாத்தா, மருந்து சாப்பிடுங்கள் என்று சொல்லி, நீரும் மாத்திரைகளும்
தந்தார். ஒரு கணம் அதைப் பார்த்து நான் திடுக்கிட்டேன். ஏன் என்றால் மொத்தம் 15 ஆமாம், நம்புங்கள்,
சேர்ந்தார்போல், 15 கொடுத்து, சாப்பிடுங்கள் என்றாள். அதையும் அவர் சாப்பிட்ட பின், தூக்க மாத்திரை
இருக்கிறதா இதில் என்றார். நர்ஸ், இல்லை, அதை இன்னும் கொஞ்ச நேரம் கழித்து தருகிறேன் என்று சொன்னார்.

என்ன மாத்திரைகள் என்று கேட்டேன். நர்ஸ் சொல்ல மறுத்துவிட்டாள். ப்ரொஃபஷணல் எதிக்ஸ் போலும்
என நினைத்து வாளா இருந்தேன்.

மறு நாள் கவனித்தேன். பல மாத்திரைகள் சும்மா ! அவைகள் மருந்துகள் அல்ல, சும்மா மருந்துகள் போல‌
அவர் நினைத்துக் கொண்டு சாப்பிடுகிறார் , அவ்வளவு தான். இத்தனை மாத்திரைகள் சாப்பிட்டால் தான்
தாம் நன்றாக இருக்க முடியும் என்று அவர் நினைக்கிறார். அவ்வளவு தான்.

இத்தனை மருந்துகள் தேவையா ? இன்றைய மருத்துவ சமூகம் என்ன சொல்கிறது ?
இந்த செய்தியை அவசியம் படியுங்கள்.
http://edition.cnn.com/2008/HEALTH/12/23/drugs.mixture/index.html