your attention please....



குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள்
மிகை நாடி மிகக் கொளல்.”

********************************************************

THIS bilingual BLOG

IS INTENDED TO CREATE A BETTER AWARENESS OF HEALTH ISSUES AMONG PUBLIC
.

****************************************************
nothing in this blog will ever ever substitute a sincere consultation and a meaningful advice of a doctor.

********************************************************
மருந்து தருவது மருத்துவன் கடமை. ஆரோக்கியம் பெறுவது ஆண்டவன் அருள்.



Saturday, November 5, 2011

அருள் கூர்ந்து உதவி செய்யவேண்டும் அம்மா.

அம்மா !! 
சென்னை கார்போரஷன் லே புதிதாக இணைக்கப்பட்டுள்ள எங்கள் வளசரவாக்கம் பகுதியிலே மாசக்கணக்காக சாக்கடைக் குப்பைகள் தெருவோரம் குவிந்து மலை போல இருக்கின்றன.  சாக்கடை நீர் குடி நீருடன் அடிக்கடி கலக்கும் அபாயம் இருக்கிறது. எல்லா விதமான வியாதிகளும் இங்கே வருகின்றன. என்னைப் போன்ற வயதானவர்கள் தெருவிலே இறங்கி நடக்க இயலவில்லை.
குறிப்பாக, போரூர் முதல் விருகம்பாக்கம் வரை சாலைகள் மிகவும் மோசமாக இருக்கின்றன. வளசரவாக்கதின் உள் நகர்கள் பழனியப்பா நகர் வீதிகள் ராதா கிருஷ்ணன் சாலை இரு பக்கங்களும் குப்பை மேடுகள் சாக்கடை நீருடன் கலந்து இருக்கின்றன. லாமேச் பள்ளிக் குழந்தைகள் இந்த சகதி வழியே அங்கே விற்பனை செய்யும் மிட்டாய், சுண்டல் இவைகளை வாங்கி மிகவும் அசுத்தமான சூழ்நிலைகளில் தின்கிறார்கள். 
குப்பை அகற்றப்படவேண்டியது போர்கால அடிப்படையிலே செய்யப்படவேண்டியது. 
சென்னை நகர் அலுவலர் துரிதமாக செயல் படவேண்டும்.
உங்களுக்கு எனது வேண்டுகோள் இதுவே.
அருள் கூர்ந்து உதவி செய்யவேண்டும் அம்மா.

No comments: